Educational Welfare.

நமது துபை அல்அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M.சாகுல் ஹமீது B.E [Imdaad] அவர்களின் திருமண விழா..

  أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  துபை அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M. சாகுல் ஹமீது B.E [Imdaad] அவர்களின் திருமண விழா அழைப்பிதழ்... 


நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M.சாகுல் ஹமீது B.E & P. நபிஸாள் அஃப்ரின். B.E (EEE)   அவர்களுக்கு ..

           ரபி[ع]உல் அவ்வல்   15 - ல்  19-09-2024  வியாழக்கிழமை  அன்று  சொக்கம்பட்டி காந்தி மஹாலில் வைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் இரு மணமக்களுக்கும் நிக்காஹ் நடைபெற உள்ளது. .  நிக்காஹ் மஜ்லிஸிற்கு  தாங்கள், தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து மன‌ மக்களை வாழ்த்தி துஆ செய்யும் படி அன்புடன் அழைக்கின்றோம். 

என்பதாக‌ நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள். ஆதலால் இரு மணமக்களை நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ...   வல்லோன் இறைவனிடம் பிராத்திக்கின்கிறோம்..". என்று அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  புதிய தம்பதிகளுக்கு எம‌து மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது... அதுமட்டுமல்லாது நம் மன்றத்தின் சார்பாக நிகாஹ் அன்பளிப்பு பரிசை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ
بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير


பாரக் அல்லாஹு லக… வ பாரக் அலைக்க… வஜமா’ பைனக்குமா ஃபி ஹைர்…!

அல்லாஹ் புதிய தம்பதிகளுக்கு அபிவிருத்தி செய்வானாக. அன்றி அவர்கள் மீது அபிவிருத்தி நல்குவானாக. மேலும் அவர்கள் இருவரையும் நன்மையில் ஓன்று சேர்த்துவைப்பானாக ஆமீன்.

HAVE A HAPPY & HARMONY LIFE!


வளமான வாழ்வுக்கு, அன்பான வாழ்துக்கள்..!
இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,
இதயப்பூர்வமாக வாழ்த்தும் எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்........"

இருமணங்கள் இணையும் உவகை திருவிழா .
சுற்றம் சூழ வற்றாத பெரியோரின் துஆக்களை கொண்டு
அன்பு அகமகிழ பாசம் நெஞ்சம் உணர வான்மழை வாழ்த்த வையகம் வியக்க
நட்சத்திரக்கூட்டம் மின்ன தென்றல் இசைக்க 
பூ வாசம் மகிழ பொன்மலை விடிய
 தந்தையின் ஆசை நிறைவேற 
தாயின் அன்பு திளைக்க 
சகோதர்களின் நேசம் உண்டாக 
நீடித்த ஆயூள் பெற்று பதினாறு செல்வங்கள் பெற்று ஈருவூலக வாழ்க்கை செழிக்க வல்லோனை பிராத்திக்கிறோம்....

بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ


இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.







Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About