உங்களுக்கு எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும் நம் அல் அமீன் ஜமாத்.

 கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 

தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நமது அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழு நாம் அனைவரும் மேம்பட & நம் அனைவரையும் ஒன்றிணைக்க ஒவ்வொரு நொடிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். 


அதன் அடிப்படையில் நமது அல் அமீன் ஜமாஅத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை திட்டங்களை புதிய உறுப்பினர்களுக்கு நினைவூட்டு முகமாகவும் & அனைவருக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் முகமாக கிழ்காணும் விஷயங்களை தெரிவிக்கப்படுகிறது.


1. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் தற்போது பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்தாலோ அல்லது தனது தனி திறமையின் மூலம் award /  பதக்கம் /  உயர் சான்றிதழ் போன்றவைகளை பெற்றாலோ அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை ஊக்கவிக்க & மேண்மைப்படுத்த நம் அல் அமீன் ஜமாத் தோள் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது.

2. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்;  அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை நேரில் சென்று ஆறுதலின் மூலமாகவும், சாந்தத்தின் மூலமாகவும் ,  தோள் கொடுக்கும்  நம் அல் அமின்  ஜமாஅத்

3. நமது அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்களின் எவரேனும் ஒருவரின் குடும்பத்தினருக்கு இறை அழைப்பை ஏற்று சென்று விட்டார்கள். என்பதாக நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால்; அன்னாருக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும்.  ஆறுதல் கூறி, இறை அழைப்பை ஏற்றவருக்கு ஹாயிப் ஜனாஸா தொழுகை நடத்தி அன்னாருக்கு நன்மையையும், துஆவையும் சேர்த்து வைக்க உறுதுணையாக இருக்க‌ தோள் கொடுக்கும்  நம் அல் அமின்  ஜமாஅத்

4. இது போன்ற நம் மன்ற செயல்பாடுகளை இன்னும் துரிதப்படுத்த உங்கள் அனைவருடைய  ஒத்துழைப்பும் & ஆதரவும் தேவைப்படுகிறது. தங்களின் மேலான சந்தாக்களை ஒரு மாதமும் விடுபடாமல் கொடுத்து இது போன்ற நலத்திட்டங்களை மேன்மைப்படுத்த ஒத்துழைக்குமாறு நிர்வாக குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.

.

இப்படிக்கு 

நிர்வாக குழு 

அல் அமீன்  ஜமாத். துபை  

நமது அல்அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்...

          أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 




நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர்  மவ்லானா அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் மகனாரும் & நம் மன்றத்தின்  உறுப்பினருமான‌ S.  முகம்மது அப்துல் ஹாதி B.E  (அருளாட்ச்சி)  & S.மீராள் ஆஃப்ரின் B.sc   அவர்களுக்கு 19-05-2024  ஞாயிற்றுக்கிழமை  ன்று செங்கோட்டை A.S.M இந்திரா திருமண மண்டபத்தில் வைத்து மவ்லானா O.M அப்துல் காதிர் ஹஜ்ரத் தலைமையில் நிகாஹ் நடைபெற‌ உள்ளதால்; நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். ஆதலால் அவர்களை நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..".

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக  ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம்  நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப்  பொழியட்டும்உங்கள்  இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்

"அன்பை மலர் மாலையாய்..!
உறவை பூச்செண்டாய்...!
ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம்
முடிவில்லா இன்ப பயணமாக
மாற எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்....... "

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 22-ஆம் ஆண்டு துவக்க விழாவும்.. நிர்வாகிகள் தேர்வும்....

 அன்பிற்குறிய அல் அமீன் துபை ஜமாஅத்தின் நிர்வாகிகள் & உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...

Download PDF.  

துபை அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழு. 2024- pdf.

عيد مبــــــــــــــــــــارك✨🌙

تقبل الله منا ومنكم صالح الأعمال

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 22- ஆம் ஆண்டு துவக்கவிழா  10/04/2024 புதன் கிழமை காலை 11.00 மணி அளவில்  துபை [Mamzer] மம்ஸார் பார்க்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பரவலாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இச்சபை கூட்டத்திற்க்கு  விழாவின் தலைவராக மதிபிற்குறிய அருளாச்சி S.ஜலாலுதீன் அவர்கள் பொறுப்பேற்க்க  மதிபிற்குறிய  அருளாச்சி S.முகம்மது அலி ஜின்னா அவர்கள் அதனை வழி மொழிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மவ்லானா S.முஹ்யித்தின் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி இச்சபையை இனிதே துவங்கி வைத்தார்கள்..

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது அதில் கீழ் காணும் நபர்கள் நம் சபையின் பொறுப்புதாரிகளாக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர் : P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  

துனைத் தலைவர்M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை)  

செயலாளர் : மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)  

துனைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 

பொருளாளர்  :  M. செய்யது மலுக்கு மேத்தா (வெள்ளானை கோட்டை) 

துனைப் பொருளாளர் : M.ரஃபிக் (வெள்ளானை கோட்டை) 

தொலைத் தொடர்பு தகவல‌ர் : M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்)

செயற்குழு உறுப்பினர்கள் : D.சேக்மைதீன் (ஊத்துமலை), காதர் ஓலி  (மேல மருதப்புரம்) M. இப்ராஹிம் [RTA] சங்கரன் கோவில். S. மேத்தப்பிள்ளை [எ] மேத்தர் (மேல மருதப்புரம்) ஆகீயோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடுத்ததாக நமது சபையின் உறுப்பினர்  S. செய்யது இப்ராஹிம் (வாசுதேவநல்லூர்) அவர்கள் தனக்கு நிக்காஹ் இருப்பதாகவும், நம் சபையினர் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டும் என்றும்,   நம் சபையின் தலைவரிடத்தில் பத்திரிக்கையை கொடுத்து வேண்டிக் கொண்டார். நம் சபையினர் அனைவரும் அவரது திருமண வாழ்வு சிறக்க வாழ்த்தி பிராதித்தனர். بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ


syed ibrahim invitation letter .pdf


 அடுத்ததாக வாட்சப் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தொலைத் தொடர்பு தகவல‌ர் : M. அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர்) அவர்களையும், அட்மின்  N.மாஹின் அபுபக்கர் (வாசுதேவநல்லூர்) அவர்களையும் தொடர்பு கொள்ளுமாறு நினைவூட்டப்பட்டது.

இக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–.

  • நம் மன்றத்தில் இவாண்டில் மொத்த எத்தனை உறுப்பினர்கள் தற்போது இருக்கிறார்கள் என்பதனை உறுதி செய்யவும், அவர்கள் அனைவரையும் மாதந்திர சங்க கூட்டங்களின் ஒன்றிணைக்க முறையான அழைப்பிதழ்களை கால் செய்தும் & இமெயில் முகவரிக்கும் & வாட்சப்பில் அனுப்புவதின்  மூலம் முறையான அழைப்பிதலோடு அழைப்பு கொடுக்க வேண்டும்  என முடிவு செய்யப்பட்டது.
  • நம் மன்றத்தின் உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரின் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அவர் தலைவரிடமுமோ, செயலாளரிடமுமோ, ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே முன்னிறுத்தினால் ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்த வழிவகை செய்யப்படும்.
  • நம் மன்றத்தின் அடுத்த மாதாந்திர கூட்டம் அனைத்து உறுப்பின‌ர்களிடமும் ஆலோசனை கேட்டு பின்னர் அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
  • நாளை நமதூரில் ஈத் பெருநாள் கொண்டாடும் நமது சங்க உறுப்பினர்களுக்கும், நம் உறவினர்  அனைவருக்கும் ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள் நமது சபை தெரிவித்துக் கொள்கிறது. عيد مبــــــــــــــــــــارك
  • تقبل الله منا ومنكم صالح الأعمال.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நன்றியுரையை நமது சபையின் துனைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  அவர்கள் வழங்கினார்கள். பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது.  அஸர் ஜமாத் தொழுகைக்குப்பின் செயலாளர் : மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)   ஆலிம் அவர்களின் துஃஆவுடன்  இச்சபை கூட்டம்  இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

ஈத் பெருநாள் சிறப்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 உங்கள் ஆதரவிற்க்கும்,  ஒத்துழைப்பிற்கும் நன்றியையும்,  நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது நம் சபை.

جزاك الله خيرا كثيرا في الدارين يا أستاذي الكريم

Thanks! 

I've invited you to fill out a form:

அல் அமீன் துபை ஜமாஅத் 2024 - ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு சிறப்பு முகாம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆதலால் கீழ்காணும் லிங்கில் உள்நுழைந்து தங்களுடைய சுய விபரங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்கிறோம். இவற்றினை பதிந்து இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

https://forms.gle/9R43CxqEKDD4ox1w6

அல் அமீன் துபை ஐமாஅத்தின் செயலாளர் M.முகம்மது ரபீக் B.C.A., மற்றும் A.ஹமீதா பர்வீன் BA., திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
25/11/2018 ஞாயிற்றுக்கிழமை புளியங்குடி முகைதீன் ஆண்டவர் அரபி பாடசாலை வளாகத்தில் வைத்து மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின்  செயலாளர்    M.முகம்மது ரபீக் B.C.A.,( மதுரை) மற்றும் A.ஹமீதா பர்வீன் BA.,( பாம்புகோவில் சந்தை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكموبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)  



முஹம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்) திருமண வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

29/08/2018 புதன்கிழமை இன்று வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில்  வைத்து மணவிழாகானும் வாசு களஞ்சியம் தெரு முஹம்மது கனி (பலசரக்கு கடை) அவர்களின் புதல்வன் நமது அல்அமீன் துபை ஜமாத்தின் முன்னாள் துணை தலைவர்  M. முஹம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்)  & A.தஸ்பீஹ் ஜீனத்  (வாசுதேவநல்லூர்) இவர்கள் "இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்".


மணமக்களை வாழ்த்தும் துஃஆ

    بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير
"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)



"அன்பை மலர் மாலையாய்..!
உறவை பூச்செண்டாய்...!
ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம்
முடிவில்லா இன்ப பயணமாக
மாற வாழ்த்துகின்றோம்....... "

அருளாச்சி மைதீன் அவர்களின் தந்தை தங்கல் மரைக்காயர் அவர்கள் வபாத் செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருளாச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முன்னாள் மன்ற உறுப்பினர் மைதீன்  அவர்களின் தந்தை தங்கல் மரைக்காயர்   அவர்கள் 22/08/2018 புதன் கிழமை  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

M.மைதீன் மேத்தர் B.E. (வெள்ளானைக்கோட்டை ) திருமண வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

22/04/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வாசுதேவநல்லூர் ஷபா மஹாலில்  வைத்து மணவிழாகானும் நமது அல்அமீன் துபைஜமாத்தின் உறுப்பினர் M.மைதீன் மேத்தர் B.E. (வெள்ளானைக்கோட்டை ) & I.பரக்கத் நிஷா B.A B.Ed, (வெள்ளானைக்கோட்டை) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.


மணமக்களை வாழ்த்தும் துஃஆ

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் "
(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றினைத்து வைக்கட்டும்)




மேலமருதப்புரம் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) தந்தை வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  புதிய உறுப்பினர் முஹம்மது மைதீன் (ஷார்ஜா) அவர்களின்  தந்தை மற்றும்  ஜமாஅத்  முன்னாள்  உறுப்பினர் ஷாகுல்ஹமீத் அவர்களின் சகோதரர் ஊத்துமலை ஜமாஅத்  மேலமருதப்புரம் கிராமத்தை சேர்ந்த மேத்தப்பிள்ளை த/பெ செய்யது அவர்கள் 19/01/2018 வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில்  வபாஅத் ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 19/01/2018 வெள்ளிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் நடைபெற்றதுஅன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின் தாயார் பாரிசாள்பீவி வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின்  தாயார் மற்றும் மேலமருதப்புரம் சேட் மரைக்காயர் அவர்களின் மனைவி பாரிசாள்பீவி அவர்கள் 14/10/2017 சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வபாஅத்ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் வைத்து ளுஹர்க்கு பின்பு  நடைபெறும்அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.