Educational Welfare.

வெள்ளானைக் கோட்டை செல்லம்மாள் ஆச்சா அவர்களின் வபாஃஅத் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

வெள்ளானைக் கோட்டை சண்முகதேவர் தெருவைச்  சேர்ந்த நமது சபையின்  செயலர் அவர்களின் தாயாரின் அம்மாவும்,  வெள்ளானைக் கோட்டை மர்ஹும். மசூது மரைக்காயர் அவர்களின் மனைவியும், இப்ராஹிம் மூஸா மற்றும் ஹமிதா  பீவி அவர்களின் தாயருமான  மர்ஹுமா  செல்லம்மாள் ஆச்சா அவர்கள் 12/09/2025 வெள்ளிக்கிழமை  மதியம் 12 :48 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு வெள்ளானைக்கோட்டையில் வைத்து நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக !!!

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! 

இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! 

இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! 

இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 

இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!   

இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!

பொறுமையை தருவாயாக! 


ஆமீன். ஆமீன்...

Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About