Educational Welfare.

சிறீலங்கா சுதந்திரதினத்தை முன்னிட்டு 1500 சிறைக்கைதிகள் விடுதலை!

எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுமார் 1500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவிட்துள்ளது. இலங்கையின் 63வது சுதந்திரதினம், நாளை (பெப்ரவரி 4) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து முதற்தடவையாக நாடுமுழுவதும் உள்ள சிறைச்சாலைகள், மற்றும் தடுப்பு காவல் நிலையங்களிலிருந்து இவ்வாறு பெருந்தொகையான கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் போது வெலிக்கடை மற்றும் போகம்பரை மற்றும் மஹரை சிறைச்சாலைகளிலிருந்து அதிகமானோர் விடுவிக்கப்படவுள்ளதாகவும், இவர்கள் மதவழிபாடுகளில் கலந்துகொள்ள வைக்கப்பட்ட பின் பாற்சோறு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது, தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் சுமார் ஐநூறு பேர் வரை விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:4தமிழ் மீடியா
Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About